பௌத்த மதகுரு தலைமையிலான சட்ட விரோத காணி அபகரிப்பாளர்களினால் மட்டக்களப்பு மயிலத்தமடு பகுதியில் ஊடகவியலாளர்கள் சர்வ மத தலைவர்கள்
குடிசார் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தடுத்து வைத்தமையை வன்மையாக கண்டித்து மட்டக்களப்பில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தினர்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மட்டக்களப்பு மாவட்ட சங்கத் தலைவி அமலநாயகி தலைமையில் மட்டக்களப்பு திருமலை வீதியில் அமைந்துள்ள
அமெரிக்க மிஷன் மண்டபத்திற்கு முன்பாக போராட்டம் இடம்பெற்றது.
பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினார்கள்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மட்டக்களப்பு மாவட்ட சங்கத்தினால் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது.