மரக்கட்டையில் மோதியது மோட்டார் சைக்கிள் : ஒருவர் உயிரிழப்பு

0
162

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு தேவிபுரம் ஆ பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு தெங்கு பனை கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக கள்ளு இறக்கும் தொழில் செய்து வரும் நபர், நேற்று மாலை கள்ளினை இறக்கி தவறணைக்கு கொண்டு சென்று கொடுத்துவிட்டு திரும்பும் வழியில் தேவிபுரம் ஆ பகுதியில் உள்ள வீதியில் குறுக்கே விழுந்து கிடந்த மரக்கட்டையில் குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது படுகாயமடைந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

55 வயதுடைய சி.சிவபாஸ்கரன் என்பரே உயிரிழந்த நிலையில் அவரது சடலம் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.