வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழா புதுவருட தினமான இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அத்துடன், பலர் காவடி – தூக்குக்காவடி எடுத்தும், அடியடித்தும், கற்பூர சட்டிகளை ஏந்தியும் அங்கப் பிரதட்சணை செய்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
நாளை வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவம் நடைபெறும்.