அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மர்ஹூம் ‘மர்ஹூம் எம்.ஐ எம். மொஹிடீன் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் நிலையம்’ வைபவரீதியாக இன்று திறந்துவைக்கப்பட்டது.
இலங்கையின் ஆய்வாளராக, முற்போக்கு சிந்தனையாளராக, எழுத்தாளராக வாழ்ந்து அண்மையில் இறையடிசேர்ந்த அக்கரைபற்றைப் பிறப்பிடமாகக்கொண்ட மர்ஹூம் எம்.ஐ எம்.மொஹிடீனை நினைவு கூரும் வகையில் மொஹிடீன் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் நிலையம்’ வைபவரீதியாக இன்று திறந்துவைக்கப்பட்டது.
இந்நிலையத்தின்யத்தின் திறப்பு விழா மர்ஹூம் எம்.ஐ எம். மொஹிடீன் ஆய்வு மற்றும்ஆவணப்படுத்தல் நிலைய ‘ ஆளுநர் சபையின் தலைவர் ஜௌபர் இஸ்மாயில் நடைபெற்றது.மர்ஹூம் எம்.ஐ எம்.மொஹிடீனை கௌரவிக்கும் முகமாக அவரின் பிறந்த இடமான அக்கரைப்பற்று இரண்டாம் மூன்றாம் குறிச்சி பொது வீதி மாநகரசபையால் மொஹிடீன் வீதி என்ற பெயர் சூட்டபட்டு அதன் பெயர்ப்பலகையும் திரை நீக்கம் செய்யப்பட்டது.
அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி வீதியில் அமைந்துள்ள இந்த நிலையத்தில் மர்ஹூம் எம்.ஐ எம். மொஹிடீனின் ஆய்வுக்கட்டுரைகள், தகவல் கணிப்பீடுகள், அவரது சிந்தனையில் உருவான கட்டிட தொழில் நுட்பங்கள், கருத்துக்கணிப்பீடுகள், அன்னார் கலந்து கொண்ட தேசிய ரீதியிலான பேச்சு வார்த்தைகள் பற்றிய துணுக்குகள், சமாதான பேச்சுவார்த்தையின்போது அவர் கூறிய கருத்துகள் ஆகியன சம்மந்தப்பட்ட நூல்கள், இறுவெட்டுக்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
விரும்பியோர்,ஆய்வாளர்கள்,மற்றும் ஆவலர்கள் இங்கு வருகை தந்து தமக்கு தேவையானவைகளை பார்வையிடலாம், வாசிக்கலாம் பிரதிகள் பண்ணலாம். அதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நிலையத்தின் நிறைவேற்று அதிகாரி சிராஜ் மசூர் தெரிவித்தார்.