மஹர சிறையில் காயமடைந்த கைதிகளில் 38 பேருக்கு கொரோனா!

0
297

கடந்த 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலை கைதிகள் சிலருக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பான காணொலிகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மோதல் சம்பவத்தில் இதுவரை 11 கைதிகள் உயிரிழந்தனர்.

அத்துடன் மேலும் 106 கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் காயமடைந்த நிலையில் அவர்களில் 29 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை காயமடைந்த கைதிகளில் 38 பேருக்கும் உயிரிழந்தவர்களில் 8 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.