சர்வதேச சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மாநகர சபை ஆணையாளரின் ஏற்பாட்டில் மரநடுகை நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
மட்டக்களப்பு பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களை உள்ளடக்கி மட்டக்களப்பு கோட்டமுனை பகுதியில் பயன் தரும் மரங்கள் நடப்பட்டுள்ளன.
இதன்போது மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை ஊழியர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.