மாந்தை பிரதேச செயலக உத்தியோகத்தர் இனந்தெரியாதவர்களால் படுகொலை!

0
512

மன்னார் மாந்தை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் விஜயேந்திரன் இனம் தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை அலுவலக பணி முடிந்து வீடு திரும்பிககொண்டிருந்த வேளை இனந்தெரியாதவர்கள் விஜயேந்திரனை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாந்தை மேற்கில் இடம்பெற்ற சட்டவிரோத மண் அகழ்வு உட்பட் சமூகவிரோத செயல்களுக்கு எதிராக குரல்கொடுத்துவந்தவர் விஜயேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.