
மாவீரர் நாள் நிகழ்வுகளை ஊக்குவித்துப் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் யாழ்ப்பாண உப பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேநேரம், கைதான ஏனைய இருவரில் ஒருவர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
மற்றொருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர், மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்ததாகக் கூறப்படும் பேஸ்புக் கணக்குக்கு உரித்துடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.