இஸ்லாத்தின் இறுதி இறை தூதர் முஹம்மத் நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு, வவுனியாவில், சர்வ மத நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா நகர பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வில், முஹம்மத் நபி நாயகம் தொடர்பான விசேட உரைகள் இடம்பெற்றன.
முன்னாள் கிராம சேவகர் யூசுப். நசார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், சர்வ மத தலைவர்கள், உலமா சபையினர் என பலரும் கலந்துகொண்டனர்.