முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டார் இந்திக்க

0
163

இறுதி யுத்தத்தின் பின்னர் முகமாலை மற்றும் கிலாலி பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அகற்றும் இடங்களுக்கு நேரில் சென்று அங்கு இடம்பெறுகின்ற மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஹேரத் பார்வையிட்டார்.

இன்று கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட உட்கட்டுமான கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கிலாலி மற்றும் முகமாலைப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையைப் பார்வையிட்டார்.

இதில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் பணி மற்றும் சார்ப், டாஸ், மற்றம் ஹலோரஸ்ட் போன்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் பணிகளைப் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இராஜாங்க அமைச்சின் செயலாளர், தேசிய கண்ணிவெடி அகற்றும் நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் வேலாயுதப்பிள்ளை பிரேமச்சந்திரன், அதன் உதவிப் பணிப்பாளர் நீல் பெர்னாண்டோ, இராணுவப் பொறியியல் பிரிவின் அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், உள்ளூர் கண்ணிவெடி அகற்றும் நிறுவன அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.