பொது நிறுவனங்கள் குழுவின் கூட்டத்தொடர் (கோப் ) நாளையதினம்(26.11.2020) முதன்முறையாக இணைய தொழில்நுட்பத்தின் காணொளி (ஒன்லைன்) ஊடாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக இணையவழி காணொளி ஊடாக நாளைய தினம் இக்கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சுகாதாரம், கைத்தொழில் மற்றும் பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகங்களின் செயலாளர்கள் காணொளி ஊடாக இணைந்துக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.