அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமார் பொன்னம்பலத்தின் 24வது நினைவேந்தல் மட்டக்களபடி;பில் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில், கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில்
நிகழ்வு நடைபெற்றது.
கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும்
செலுத்தப்பட்டது.
குமார் பொன்னம்பலம் 2000ஆம் ஆண்டு, கொழும்பில், படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.