யாழ். பல்கலைக்கழக கல்வித்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி தனது 72 ஆவது வயதில் நேற்று காலமானார்.
யாழ்ப்பாணம் அல்வாய் தெற்கைச் சேர்ந்த அவர், யாழ். பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராக இணைந்து கலைப்பீட விரிவுரையாளராக பணியாற்றி தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக கல்வியியல்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளராக நீண்ட காலம் பணியாற்றி இருந்தார்.
இவர் காத்தவராயன் உள்ளிட்ட பல இதிகாச புராண நாடகங்களை தயாரித்தும் நடித்தும் மேடையேற்றியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் திடீரென காலமானார். அவரது இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றது.