முன்னாள் சுகாதார அமைச்சர் மீண்டும் விளக்கமறியலில்!

0
81

தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேரும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒளடத விநியோகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க தாக்கல் செய்துள்ள மனுவும் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் தலைமையிலான ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.