முப்படையினருக்குப் பங்களிப்பு வழங்கிய முஸ்லிம் சமூகத்தை நினைவுகூர்ந்து ஓட்டமாவடியில் தூபி

0
303

பயங்கரவாதத்திற்கு எதிரான 32 வருட மீட்புப் போரில், இலங்கையின் முப்படையினருக்குப் பங்களிப்பு வழங்கிய முஸ்லிம் சமூகத்தவர்களை நினைவுகூர்ந்து மட்டக்களப்பு ஓட்டமாவடிப் பிரதான பாலத்திற்கு
அருகே நினைவுத்தூபியொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொலனறுவையில் இருந்து வருகை தந்த சிங்கள மக்கள் மற்றும் ஓட்டமாவடியைச் சேர்ந்த முஸ்லிம் மக்களும் நினைவுத் தூபி திறப்பு நிகழ்வில் பங்கெடுத்திருந்த நிலையில், முப்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி 233வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி கேணல் கமல்த சில்வா, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த பண்டார, கல்குடா பொலிஸ் பொறுப்பதிகாரி சந்திரகுமார ஆகியோரும் நிகழ்வில் பங்கெடுத்தனர்.
தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து நினைவுத் தூபியை திரைநீக்கம் செய்தனர்.
விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் பெயர்களும் நினைவுத்தூபியில் பொறிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கனடா அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாட்டை முன்னெடுப்பதாகக் குறிப்பிட்டு நேற்றைய தினம் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடிப் பகுதியில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.