முள்ளியான் வைத்தியசாலையின் அடிப்படை தேவைகள் தொடர்பில் கலந்துரையாடல்

0
129

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு முள்ளியான் வைத்தியசாலை நலன்புரிச் சங்ககத்தினர், முள்ளியான் வைத்தியசாலையின் அடிப்படை தேவைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
முள்ளியான் வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் அதிகாரி ஜோகராஜா-திவ்யா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.சுதோக்குமாரன், வைத்தியர் வினோதா அர்ச்சுனன் மற்றும் முள்ளியான் கிராம சேவகர் கி.சுபகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வைத்தியசாலையின் அடிப்படை தேவைகள், பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
முள்ளியான் வைத்தியசாலையில் காணப்படும் அடிப்படை தேவைகள் மற்றும் நோயாளர் காவு வண்டி இல்லாமல் மக்கள் அவதிபடுவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
வைத்தியசாலை வளாக வீதியில் மின்விளக்குகள் பொருத்துவது, முள்ளியான் இயக்கச்சி வீதியை புனரமைப்பு செய்வது, கட்டைக்காடு கேவில் பேருந்து சேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் கட்டைக்காடு, போக்கறுப்பு, நித்தியவெட்டை கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகத்தில் இருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் பொதுமக்களும் பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது முள்ளியான் வைத்தியசாலைக்கென நோயாளர் காவு வண்டியை துரிதமாக பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.