28 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நடவடிக்கை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்றையதினம் ஆரம்பமாகியது.
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நடவடிக்கை, புதுக்குடியிருப்பு நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
எதிர்வரும் 18ஆம் திகதி வரை இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்குவதற்கு வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கமும் பொது அமைப்புகளும் இணைந்து வேலைத்திட்டமொன்றினை வடகிழக்கெங்கும் முன்னெடுக்கின்றனர்.
இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தை வளாகத்திற்கு அருகில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று இரண்டாவது நாளாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கஞ்சி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles