மூன்று மாதங்களுக்குப் பின்னர் லாப் சமையல் எரிவாயு விநியோகம்

0
227

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கடந்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் லாப் சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கடந்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் லாப் சமையல் எரிவாயு இன்று கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

இதனிடையே, லாப் சமையல் எரிவாயுவை பெறுவதற்காக அதிகாலையிலிருந்து பொது மக்கள் வரிசைகளில் காத்திருந்தனர்.

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள ஹிஸ்புல்லாஹ் மண்டபத்துக்கு முன்பாகவும், ஆரையம்பதியிலுள்ள லாப் சமையல் எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகத்துக்கு முன்பாகவும் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு பின்னர் 1050 லாப் சமையல் எரிவாயு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வந்ததாகவும் மாவட்டம் முழுவதும் விற்பணை பிரதி நிதிகளுக்கு அதனை பிரித்து வழங்கி பொது மக்களுக்கு சிரமமில்லாத வகையில் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லாப் சமையல் எரிவாயு மட்டக்களப்பு மாவட்ட விநியோகஸ்தர் தெரிவித்தார்.