மெக்சிகோ நாட்டு எச்.எம்.எஸ்.பி துறவர
சபையின் வெள்ளிவிழா விசேட திருப்பலி

0
311

மெக்சிகோ நாட்டு எச்.எம்.எஸ்.பி துறவர சபையின் 25ஆம் ஆண்டு நிறைவு விசேட திருப்பலி மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டது .

மெக்சிகோ நாட்டு எச்.எம்.எஸ்.பி துறவர சபையின் அருட்சகோதரிகள் தமது ஆன்மீக மறை பணிக்காக இலங்கைக்கு நாட்டுக்கு வருகை தந்து கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இலங்கையில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய பங்கில் தமது ஆன்மீக மறை பணியினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமது துறவற சபை ஆரம்பிக்கப்பட்டு 25ஆம் ஆண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசெப் ஆண்டகையின் விசேட அனுமதியுடன் பங்கு தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளாரின் ஆலோசனையுடன் மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசெப் ஆண்டகையின் தலைமையில் இன்று இடம்பெற்ற திருவுடல்
திரு இரத்த பெருவிழா திருப்பலியுடன் மெக்சிகோ நாட்டு எச்.எம்.எஸ்.பி துறவர சபையின் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது .

மெக்சிகோ நாட்டு எச்.எம்.எஸ்.பி துறவர சபையின் அருட்சகோதரிகளின் ஒழுங்கமைப்பில் துறவர சபையின் 25ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் இடம்பெற்ற விசேட திருப்பலியில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த மெக்சிகோ நாட்டு எச்.எம்.எஸ்.பி துறவர சபையின் மதர் ஜெனரல் அருட் சகோதரி எஸ்.மெரேல்டா அருட் சகோதரிக்கு அருட்சகோதரிகளினால் பொன்னாடை போர்த்தி பங்குமக்களினால் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இத்திருப்பலியில் மெக்சிகோ நாட்டு எச்.எம்.எஸ்.பி துறவர சபையின் மதர் ஜெனரல் அருட் சகோதரி எஸ்.மெரேல்டா உட்பட அருட்தந்தையர்கள் ,அருட் சகோதரிகள்,பங்கு மக்கள் என பலர் கலந்துகொண்டனர் .