மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1015 பேருக்கு எச்சரிக்கை

0
130

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1015 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறுவோரை கண்காணிக்கும் செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் 803 பொலிஸார் இணைந்த நேற்றைய தினம் கண்காணிப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது 2788 மோட்டார் சைக்கிள்களும் 2337 முச்சக்கர வண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் 7084 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1015 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.