மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1038 பேருக்கு எச்சரிக்கை

0
108

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1,038 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறுவோரை கண்காணிக்கும் செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் 621 பொலிஸார் இணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது 3,166 மோட்டார் சைக்கிள்களும் 1,686 முச்சக்கர வண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அத்துடன் 5,650 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1,038 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்தனர்.