மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1,097 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறுவோரை கண்காணிக்கும் செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் 638 பொலிஸார் இணைந்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு இருந்தனர்.
இதன்போது 2,221 மோட்டார் சைக்கிள்களும் 2,214 முச்சக்கர வண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அத்துடன் 5,631 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1,097 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.