மொனராகலை இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாமல்ஓயா வாவி பிரதேசத்தில் பொலிஸார் நேற்று (27) மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உடவத்துர, நாமல்ஓயா பிரதேசத்தை சேர்ந்த 30 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.