தபால் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் செயற்பாட்டுப் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வுகாணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டமானது நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, 653 தபால் நிலையங்கள், 3 ஆயிரத்து 410 உப தபால் நிலையங்கள் மற்றும் அனைத்து நிர்வாக அலுவலகங்களும் முடங்கும் எனவும், சுமார் 27 ஆயிரம் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் எனவும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
