யாழ்ப்பாணம் மயிலிட்டியில், ஆபத்தான படகுப் பயணத்தில் ஈடுபட்ட இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை, கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.
மயிலிட்டி கடல் பகுதியில், சனிக்கிழமை, குடும்பஸ்தர் ஒருவர் தனது இரண்டு வயது பிள்ளையையும், தனது சகோதரியின் 7 வயது மகளையும் படகில் ஏற்றி, கடலில் ஆபத்தான முறையில் படகை செலுத்தியுள்ளார்.
இதன்போது, படகினுள் நீர் உட்புகுந்ததுடன், படகில் இருந்த பிள்ளைகளும் பயத்தில் கத்திய வேளை, கடலில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், விரைந்து சென்று படகில் இருந்த பிள்ளைகளை மீட்டதுடன், படகை கரைக்கு செலுத்துமாறு குடும்பஸ்தருக்கு உத்தரவிட்டனர்.
கரை சேர்ந்த குடும்பஸ்தரை கடுமையாக எச்சரித்த கடற்படையினர், இரு பிள்ளைகளையும் கரையில் பாதுகாப்பாக சேர்ந்தனர்.
இதேவேளை, படகோட்டிய குடும்பஸ்தர், மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.