வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் யாழில் உள்ள தனது காணியை விற்றுவிட்டு 1 கோடி 8 இலட்சம் ரூபாவினை எடுத்துச் சென்றவேளை, அவரிடம் இருந்து கொள்ளையர்கள் அந்த பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 7 மணி அளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சங்குவேலி பகுதியில் உள்ள தனது காணியை விற்பனை செய்துவிட்டு பணத்தினை எடுத்துச் சென்றவேளை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார் பணத்தினை கொள்ளையடித்த இருவரை கைது செய்துள்ளனர்.