யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதன் அடிப்படையில் சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கமைய தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராமங்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்
இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
யாழில் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஜே189, 190ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு சில பகுதிகள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன
அதே நேரத்தில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் அரசடிப்பகுதி தனிமைப் படுத்தப் பட்டுள்ளது ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டப்பட்டிருந்த தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் இரண்டு கிராம சேவகர் பிரிவும் அதாவது அன்ரனிபுரம் ,தையிட்டி அதேபோல காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் ஒரு கிராம சேவகர் பிரிவும் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது
மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு அரசினால் வழங்கப்படும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.