யாழில் நாளாந்தம் 200 பேர் போக்குவரத்து பொலிசாரிடம் சிக்குவதாக தகவல்!

0
125

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளாந்தம் 200 பேர் போக்குவரத்து பொலிசாரிடம் பிடிபடுவதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுளசெனரத் தெரிவித்தார்

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் இருநூறுக்கு பேருக்கு போக்குவரத்து பொலிசார் தண்ட பற்றுச்சீற்று வழங்குவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் மது போதையில் வாகனம் செலுத்துவோர் தலைக்கவசம் அணியாது செல்வோர் வீதி நடைமுறைகளை பின்பற்றாமை மற்றும் சாரதி அனுமதிபத்திரம் இல்லாது பயணித்தமை மற்றும் வருமான வரி மற்றும் ஏனைய வாகன சான்றிதழ்களை வைத்திருக்காமைபோன்ற குற்றச்சாட்டுகளால் நாளாந்தம் 200 பேருக்கு தண்ட பற்றுச்சீட்டு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்,

அத்துடன் தண்டப் பற்றுச்சீட்டு வழங்கப்படுபவர்களில் 10 வீதமானவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு ட்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.