யாழில்  நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது!

0
228

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த  குருநகர் பகுதியை சேர்ந்த23 வயதுடையசந்தேக நபர்

5 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்யாழ்

மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால்  கைது செய்யப்பட்டுள்ளார் 

கடந்த யூன்  மாதம் குருநகர் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குறித்த நபரை கைது செய்வதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முயற்சித்த போது குறித்த நபர் தப்பியோடி கோப்பாய் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மறைந்திருந்ததோடு

 இன்றைய தினம் குறித்த பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கு  ஹெரோயின் பொரு விற்பனை செய்வதற்கு தயாராக இருந்தபோது5 மில்லி கிராம் ஹெரோயின்போதைப்பொருளுடன் 

 யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ்பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

 கைது செய்யப்பட்டவருக்கு ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதோடு குறித்த நபர் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது