யாழில் பாணின் விலை உயர்த்தப்பட மாட்டாது! அதிக விலைக்கு பாண் விற்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கான சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என
யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பாக உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி குணரட்ணம் தெரிவித்தார்,
யாழ் மாவட்டத்தில் பாண் விலை அதிகரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிறீமா நிறுவனத்தின் மா விலை உயர்த்தப்படவில்லை எனவே பேக்கரி உரிமையாளர்கள் பாணின் விலையினை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை அவ்வாறு யாழ்ப்பாண மாவட்டத்தில் பேக்கரி உரிமையாளர்கள் அதிக விலைக்கு பாணினை விற்றால் அவர்களுக்கு ரிய சலுகைகள் இல்லாதுபோய்விடும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தினை பொறுத்தமட்டில் பிறீ மா நிறுவனத்தின் மா அனைத்து பேக்கரி உரிமையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது அது தொடர்ச்சியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது விலையில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.
கொழும்பில் பாணின் விலை உயர்த்தப்படுவதற்காக யாழ்ப்பாணத்தில் பாணின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையில்லை 12,500 விற்கு பிறீமா நிறுவனத்தினரால் எமக்கு மா வழங்கப்படுகின்றது
எனவே யாழ்ப்பாணமாவட்டத்தில் 200 ரூபாய்க்கு மேல் பாணின் விலையினை அதிகரிக்க தேவையில்லை அவ்வாறு யாராவது பாணின் விலையினை அதிகரித்து விற்றால் அவர்களுக்குரிய எரிபொருள் மற்றும் எரிவாயு பெறுவதற்கான சலுகைகள் நீக்கப்படக்கூடிய சாத்திய கூறுகள் காணப்படுகின்றன
அதிக விலைக்கு பாணினை விற்றால் எமக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகள் அரச அதிபர் உட்பட்வர்கள் அதனை கண்காணிப்பார்கள் கண்காணிக்கும் இடத்தில் எமக்குரிய சலுகைகள் நிறுத்தப்படக்கூடிய சாத்திய கூறுகள் உள்ளது
அதாவது பேக்கரி உரிமையாளர்கள் யாராவது மா தேவைப்படுவோர் எமது சங்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களுக்குரிய மாவினை கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக் கொடுக்க முடியும் ஆனால் அதிக விலைக்கு வானினை விற்க வேண்டிய தேவை இல்லை என்றார்,