யாழில் பெண் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

0
165

யாழ்ப்பாணம் குருநகர் இராணுவ முகாமில் பணியாற்றும் 23 வயது பெண் சிப்பாய் டெங்கு நோய் தாக்கத்தால் உயிரிழந்தார்.

கடந்த 5ஆம் திகதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு பலாலி இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு டெங்கு தொற்று கண்டறியப்பட்டது.

இதனால், அவர் கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பைச் சேர்ந்த கே.எம்.கே.செவ்வந்தி என்ற பெண் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.