யாழில் பெருமளவான கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது!

0
146

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதியில் 104 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை வீதியூடாக முச்சக்கர வண்டியில் கஞ்சாவினை எடுத்துச்செல்லும் போது, கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.