யாழில் பொது நூலக ஆண்டு நிறைவு விழா!

0
232

யாழ்ப்பாணம் இணுவில் பொது நூலகம் மற்றும் சனசமூக நிலையத்தின் ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கல் நிகழ்வும் இணுவில் நூல் நிலைய கலாசார மண்டபத்தில் தலைவர் சிவலிங்கம் புரந்தரா தலைமையில் நடைபெற்றது.

அமரர் பொன்னையா கனகம்மாவின் அனுசரணையில் நடந்த இந்நிகழ்வில் ஆசியுரை, தலைமையுரை என்பன இடம்பெற்றன.

இதன்போது சமூக நலத்திட்ட வாழ்வாதார உதவி , புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில் வழங்கல், மற்றும் இணுவில் பொது நூலக ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட துடுப்பாட்ட சுற்றுப் போட்டிக்கான வெற்றிக் கேடயம், பணப்பரிசில்கள், சதுரங்க போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் வெற்றிக் கேடயங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் நிகழ்வில் இணுவில் சிறீ பரராஜ சேகரப் பிள்ளையார் திருநெறிய தமிழ் மறைக் கழகத்திற்கான ஊக்குவிப்புத் தொகையும், நலிவுற்ற குடும்பத்திற்காக வாழ்வாதாரமாக தையல் இயந்திரம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன், யாழ். பல்கலைக்கழக பிரதி நூலகர் கலாநிதி கல்பனா சந்திரசேகர், கிராம சேவகர் இ.ரமேஷ், கனடா வாழ் அங்கத்தவர்கள், மாணவர்கள் மற்றும் நூலக நலன் விரும்பிகள், அங்கத்தவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.