யாழில் மாடுகளை திருடியவர் கைது!

0
123

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் இருந்து இன்றையதினம், 3 மாடுகளை திருடிச் சென்ற ஒருவர், மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹயஸ் வானில் மாடுகளை கடத்துவதாக, மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நவாலி மயானத்துக்கு அருகில் வைத்து, யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.