யாழில் யாசகர்கள், ஊதுபத்தி விற்கும் பெண்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

0
219

யாழ். நகரில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தும் யாசகர்கள், ஊதுபத்தி விற்கும் பெண்கள் தொடர்பாக பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.நகருக்கு தினசரி பெருமளவு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் யாசகர்கள் மற்றும் ஊதுபத்தி விற்கும் பெண்களின் தொல்லை தினசரி அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக இவ்வாறான நபர்கள் பொதுமக்களை அவதூறாக பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

இவ்வாறான நடவடிக்கைகளினால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறையும் அபாயமும் உள்ளது.

இந்நிலையில் சித்திரை புத்தாண்டு காலம் நெருங்குவதால் தற்போதுள்ள இந்த மோசமான நிலமை மேலும் தீவிரமடையவுள்ளது.

எனவே பொறுப்புவாய்ந்தவர்கள் சித்திரைப் புத்தாண்டு காலத்திற்கு முன்னர் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.