யாழில்  ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட மாபியா கும்பல் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது!

0
157

யாழ்ப்பாணத்தில்  ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்தபெண் உட்பட  பிரதான  சந்தேக நபர்கள்  மூவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒரு பெண் உட்பட 3பேர் அடங்கிய  மாபியாகும்பல் ஒன்று இன்று காலை மானிப்பாய்சுதுமலை பகுதியில் வைத்து யாழ்  மாவட்ட குற்றத்தடுப்பு  பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு 64 கிராம் ஹெரோயினும்  கைப்பற்றப்பட்டுள்ளது

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் இன்று நடாத்திய விசேட சுற்றி  வளைப்பின் போதே குறித்த  கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது

மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சித்தப்பா என அழைக்கப்படும் நபர்  ஒருவரும் வத்தளை பகுதியை  சேர்ந்த ஒருவர் குரு நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருமே இன்று காலை கைது  செய்யப்பட்டுள்ளர் கைது செய்யப்பட்ட கும்பல் நீதிமன்றத்தில்முற்படுத்தப்படவுள்ளனர்,