
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்தபெண் உட்பட பிரதான சந்தேக நபர்கள் மூவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒரு பெண் உட்பட 3பேர் அடங்கிய மாபியாகும்பல் ஒன்று இன்று காலை மானிப்பாய்சுதுமலை பகுதியில் வைத்து யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு 64 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் இன்று நடாத்திய விசேட சுற்றி வளைப்பின் போதே குறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது
மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சித்தப்பா என அழைக்கப்படும் நபர் ஒருவரும் வத்தளை பகுதியை சேர்ந்த ஒருவர் குரு நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருமே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளர் கைது செய்யப்பட்ட கும்பல் நீதிமன்றத்தில்முற்படுத்தப்படவுள்ளனர்,
