யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுகால் மடம் லோட்டஸ் வீதியில் அமைந்துள்ள கடையொன்றில், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு, முச்சக்கரவண்டி உதிரிப்பாக கடைக்கு சென்ற நபர், கடையின் கதவை கொத்தி உட்சென்று, வாகன உதிரிப்பாகங்களை அடித்த நொருக்கி தீயிட்டு தப்பி சென்றுள்ளார்.
அதனையடுத்து, கடையின் உரிமையாளர், யாழ்ப்பாணம் பொலிசாருக்கு முறையிட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாண பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.