யாழ்ப்பாணம் – தூய யோவான் ஆலய பாலர் பாடசாலை சிறார்களின் சிறுவர் சந்தை, இன்று காலை இடம்பெற்றது.
பாலர் பாடசாலை தலைவர் ஜெபச் செல்வன் தலைமையில் நடைபெற்ற சிறுவர் சந்தை நிகழ்வில், சிறுவர்களின் வியாபார நடவடிக்கை இடம்பெற்றது.
இதன்போது வியாபாரிகள் போன்று உடை அணிந்து மரக்கறிகள், தேய்காய் உள்ளிட்ட பல தரப்பட்ட பொருட்களை சிறார்கள் விற்பனைக்காக வைத்திருந்தனர்.
சிறுவர் சந்தையில் கலந்துகொண்ட சிறார்களின் பெற்றோர், பொதுமக்கள் சிறார்களிடம் பொருட்களை கொள்வனவு செய்து சிறார்களை மகிழ்வித்திருந்தனர்.