யாழ்ப்பாணம் வடமராட்சியில், வாகன இறுதி இலக்கத்தின் அடிப்படையில், எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது.
நீண்ட நாட்களுக்கு பின்னர், இன்று, பெற்றோல் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.வாகன இறுதி இலக்கங்களான, 3, 4, 5 ஆகிய இலக்கங்களுக்கே, இவ்வாறு பெற்றோல் வழங்கப்படுகின்றது.
கரவெட்டி பிரதேச செயலரின் பொறுப்பில், நெல்லியடி பொலிஸார் மற்றும் இராணுவ ஒழுங்குபடுத்தலில், எரிபொருள் விநியோகம், சீராக முன்னெடுக்கப்பட்டுள்ளது.பெற்றோல் விநியோகத்தின் போது, பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட, எரிபொருள் விநியோக அட்டையில் பதியப்பட்டே, இவ்வாறு பெற்றோல் விநியோகம் இடம்பெறுகின்றது.
மோட்டார் சைக்கிள்களுக்கு ஆயிரத்து 500 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கும், கார்களுக்கு, 7 ஆயிரம் ரூபாவுக்கும், எரிபொருள் வழங்கப்படுகின்றது.