யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக பண்பாட்டு விழா, பிரதேச செயலாளர் ஆ.சிறி தலமையில், புலோலி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. விருந்தினர்கள், மங்கல வாத்திய இசையுடன், மலர் மாலை அணிவித்து விழா மண்டபம் வரை அழைத்துச் செல்லப்பட்டு, மண்டபத்தில் நிகழ்வு நடத்தப்பட்டது. பிரதம விருந்தினராக, வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைகஙள பிரதி பணிப்பாளர் திருமதி இராஜமல்லிகை, பருத்தித்துறை பிரதேச செயலர் ஆ.சிறி, பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் ச.அரியகுமார், தற்பாதுகாப்பு கலை ஆசிரியர் இரட்ணசோதி ஆகியோர் பங்கேற்றனர். மங்கள இசை, வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றதுடன், வரவேற்பு உரையை, பருத்தித்துறை உதவி பிரதேச செயலர் தயானந்தன் நிகழ்த்தியதை தொடர்ந்து, தலமை உரையை, பருத்தித்துறை பிரதேச செயலர் ஆ.சிறி நிகழ்த்தினார்.
தொடர்ந்து, விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றது. சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டதுடன், பிரதேசத்திற்க்கு உடப்பட்ட கலைஞர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.