யாழ்ப்பாணம் வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின், இன்றைய மாதாந்த அமர்வில், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
எதிர்வரும் 27 ஆம் திகதி, மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெறவுள்ள நிலையில், இன்று, பிரதேச சபை தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தலைமையில், தவிசாளரின் மேசையில், ஒளித்தீபம் ஏற்றி, அஞ்சலி செலுத்தப்பட்டது.