யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் கேரள கஞ்சா கைப்பற்றல்

0
192

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் 50 கிலோவிற்கும் அதிகமான கேரளக் கஞ்சா நேற்று இரவு கைப்பற்றப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை ஊரிக்காடு கடற்கரைப் பகுதியில் மர்மப்பொதியொன்று இருப்பதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய நடாத்தப்பட்ட சோதனையின்போது, கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படாத நிலையில், மீட்கப்பட்ட கஞ்சா வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.