யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், வடிகால் அமைப்புக்களைப் பார்வையிட்டுள்ளார்!

0
41

நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் வடிகால் அமைப்புக்களைப் பார்வையிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஆறுகால்மடத்தடியில் உள்ள குருசுமதவடி வடிகால் தொடர்பாகவும்
அதனைத்தொடர்ந்து மானிப்பாயில் உள்ள கொத்தலாவ வடிகால் தொடர்பாகவும் இன்று காலை 10.00 மணிக்கு குறித்த பகுதிகளுக்கு நேரடியாக சென்ற ஆராய்ந்தார்.

இரு வடிகால்களையும் சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களுடன் பார்வையிட்ட பதில் அரசாங்க அதிபர் முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
டெங்கு நோய் வராமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மழை நீர் தேங்கி நிற்பதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகள், வடிகாலின் நீரோட்டம் மற்றும் துப்பரவு சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து எடுக்க வேண்டிய நடிவடிக்கைகளை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அத்துடன் இதன் முன்னேற்றங்கள் தொடர்பில் அடுத்து வரும் டெங்கு கட்டுப்பாட்டுக் கூட்டத்தில் ஆராயப்படும் எனவும் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
இந்த விஜயத்தில் நல்லூர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், நல்லூர் மற்றும் மானிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியிலாளர், யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர், நல்லூர் மானிப்பாய் பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இணைந்து கொண்டனர்.