யாழ்.ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதல் சம்பவம்: மூவர் கைது!

0
115

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில், சந்தேகநபர்கள் மூவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் அச்சுவேலி, மாவிட்டபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாhர் தெரிவித்துள்ளனர்.
அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த 13ஆம் திகதி அதிகாலை 12.15 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஜந்து பேர் கொண்ட கும்பல் தாக்குதலை மேற்கொண்டிருந்தது.
இதன்போது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டன. இதன்மூலம் சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்தக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், நேற்று மாலை மூவர் கைது செய்யப்பட்டனர்.