யாழ். சர்வதேச விமான நிலையப் பாதையை விஸ்தரிப்பதில் இலங்கை பின்னடிப்பு: சுரேஸ் பிரேமச்சந்திரன்

0
304

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையப் பாதையை விஸ்தரிக்க இந்திய அரசு பல மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கினாலும் இலங்கை அரசு இதனை விஸ்தரிப்பதில் எவ்வளவு அக்கறையுடன் உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பை நடத்திய வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.