யாழ். சிறுப்பிட்டியில் வீதியில் கொட்டப்பட்ட மணல்

0
169

யாழ். சிறுப்பிட்டி பகுதியில் வீதியில் கொட்டப்பட்ட மணலால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதியின் சிறுப்பிட்டி பகுதியில் மணல் எற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் மறித்த நிலையில், மணலை கடத்தியவர்கள் தப்பி ஒடிய போது வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றனர்.

இதனால் வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியால் பயணிப்பவர்கள் வீதியோரமாக தமது போக்குவரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கொட்டப்பட்ட மணலை வீதியில் இருந்து சிலர் வீடுகளுக்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.