யாழ். தென்மராட்சி மிருசுவில் ஏ-9 வீதியில் ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதுண்டதில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் விசுவமடு மேற்கைச் சேர்ந்த 27 வயதுடைய குமாரசாமி கஜீபரன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வாகன திருத்த வேலைகளை முடித்துக்கொண்டு விசுவமடு திரும்பிய வேளையிலேயே விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






