யாழ். பண்ணை பகுதியில், நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி, பொலிசார் தாக்கல் செய்த வழக்கு, தள்ளுபடி

0
194

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி, யாழ்ப்பாண பொலிசார் தாக்கல் செய்த வழக்கை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், தள்ளுபடி செய்துள்ளது.

இன்று, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, வழக்கை தொடர, பொலிசாருக்கு அதிகாரம் இல்லை என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தொடர்பில், பொலிஸாரின் வழக்கிடு தகைமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் கேள்விக்கு உட்படுத்தி, இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, இந்து அமைப்புக்கள் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகி, கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி வழக்கு விசாரணையின் போது, நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.