‘யாழ். மாநகர சபையில் சைவ சமயியே முதல்வராக வேண்டும்’: சிவசேனை வலியுறுத்து

0
189

சைவ மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட யாழ். மாநகர சபையில் சைவ சமயியே முதல்வராக வேண்டும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் வலியுறுத்தியுள்ளார். சைவர்களுடைய நிலத்தில், பூமியில், நகரத்தில், சைவர்கள் ஆட்சி, சைவர்களின் தலைமை, பெரும்பான்மை எண்ணிக்கையில் சைவர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில் சைவ சமயியே முதல்வராகுக. வேறு எந்த சமயத் திருவிழாவிலும் கிடைக்காத கணிசமான வருவாய் கிடைக்கும் நல்லூர் திருவிழாவில் பங்கேற்கச் சைவ சமயியே மாநகர சபை முதல்வராகுக என க. சச்சிதானந்தன் விடுத்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.