
ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவின் பணிப்பின்பேரில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்னவால் அமைச்சருக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபருக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.